View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 101 of 157 FirstFirst ... 519199100101102103111151 ... LastLast
Results 1,001 to 1,010 of 1587

Thread: new serials/programs

Hybrid View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் வந்தாச்சு!



    விஜய் டிவியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி, "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.'' இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு பிரபுதேவா நேரில் வந்திருந்து அடுத்த `பிரபுதேவாவை' தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    விஜய் டிவி மீண்டும் `உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சியை தொடங்குகிறது. இதற்கான நேர்முகத்தேர்வுகள் கோவை, திருச்சி, மதுரையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

    நாளை சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட நடன ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    துரத்தும் அம்மா! ஓடும் மகள்!


    விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அவள்' தொடர், ரசிகர்ளை கவர்ந்த தொடராகி இருக்கிறது.

    பெற்றவர்களால் அனாதையாக்கப்பட்டு, சாந்தா அம்மாளுக்கு வளர்ப்பு மகளாகவும், மகேஷிற்கு உடன்பிறவா தங்கையாகவும் செல்லமாக வளர்கிறாள் ஷாலினி.

    மகேஷிற்கு திருமணமாக, அந்த வீட்டிற்கு மருமகளாக வருகிறாள். புரபசர் ஜெயந்தியின் மகள் அமலா, திருமணத்திற்கு முன் ஷாலினியைக் கண்டறியாத ஜெயந்தி, ஷாலினியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.


    தன் மகள் அமலாவின் உரிமை, சந்தோஷம் அந்த வீட்டில் ஷாலினியால் பறிபோய்விடுமோ எனப் பயப்படுகிறாள் புரபசர் ஜெயந்தி. அதனால் ஷாலினியை அந்த வீட்டிலிருந்து பிரிக்க முயற்சி செய்கிறாள்.

    இந்நிலையில், ஷாலினியை சாந்தாவுக்கு வளர்ப்பு மகளாக கொடுத்த மெய்யப்பனுக்கு, புரபசர் ஜெயந்தி தான் ஷாலினியை பெற்றெடுத்த தாய் என்று தெரிய வருகிறது. அதோடு ஷாலினி வளரும் வீட்டிற்கே தன் மகள் அமலாவை மருமகளாக அனுப்பியிருக்கிறாள் என்றும் தெரியவருகிறது. இந்த உண்மை மெய்யப்பனைத் தவிர யாருக்கும் தெரியாது.

    ஷாலினி தனது மகள் என்று தெரியாத ஜெயந்தி, அவள் அந்த வீட்டை விட்டு மட்டுமல்ல, மகேஷை விட்டும் நிரந்தரமாகப் பிரியவேண்டும் என்று பல வழிகளில் துன்புறுத்துகிறாள். தன்னை பாசமாக வளர்த்த அண்ணன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஷாலினி எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாள்.

    ஜெயந்தியின் துன்புறுத்தலால், ஷாலினி எங்குமே நிம்மதியாக இருக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள். காலம் அவளை ஜெயந்தியின் காலடியிலேயே வந்து தள்ளுகிறது.

    தன் வாழ்வில் ஒரே எதிரியாக வந்த ஷாலினி, தன் வயிற்றில் பிறந்த மகள் என்று ஜெயந்திக்கும் தெரியாது... தன்னை ஓட ஓட துரத்தும் ஜெயந்தி தான் தன்னைப் பெற்ற தாய் என்று ஷாலினிக்கும் தெரியாது. எப்போது இருவருக்கும் உண்மை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்போடு தொடர்கிறது, தொடர்.

    புரபசர் ஜெயந்தியாக பெரிய திரை முன்னணி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். ஷாலினியாக நடிப்பவர் ஸ்ரீகலா. மற்றும் சஞ்சீவ், மகாலட்சுமி, மணிகண்டன், சந்திராயன், ஏ.ஆர்.எஸ், பாரதி, சிவன் சீனிவாசன், ஸ்ரீராம் நடிக்கிறார்கள். இயக்கம்: ஜி.ஜெயகுமார்.






    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #3
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கம்சனை வதம் செய்த கண்ணன்

    ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, `மகாபாரதம்' தொடர்.


    தன் சுயநலத்திற்காக திருமணம் நடந்த அன்றே தங்கை தேவகி மற்றும் அவளின் கணவன் வசுதேவர் இருவரையும் சிறையில் அடைக்கிறான் கம்சன். விதிப்படி தேவகியின் எட்டாவது மகன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அறிந்த கம்சன் கோகுலத்துக் கண்ணன்தான் தேவகியின் எட்டாவது மகன் என்பதை தெரிந்து கொள்கிறான். தன் நண்பனின் உதவியுடன் கண்ணனை கோகுலத்திலிருந்து மதுராவிற்கு வரவழைக்கிறான்.

    எப்போதும் தைரியமாக இருந்த கம்சனுக்கு, கண்ணனின் வரவு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கண்ணன் கம்சனுடன் மல்யுத்தப் போட்டி நடத்த, போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் கம்சனை வதம் செய்கிறான்.

    அந்த மகிழ்ச்சியுடன் கண்ணன் சிறைச்சாலையில் இருக்கும் தன் தாய், தந்தையரை விடுதலை செய்கிறான். இது ஒருபுறம் இருக்க, கிந்தம முனிவரின் சாபத்தால் தன் மனைவிகளை தொடாதிருந்த பாண்டு ஒரு நாள் தனது இரண்டாவது மனைவியான மாதுரி குளிப்பது கண்டு அவளை அணைக்க முற்பட உயிர் துறக்கிறான். பாண்டுவின் சாவிற்கு தன்னை காரணம் காட்டி மாதுரியும் உயிரை விட, குந்தி தன் ஐந்து பாண்டவ புத்திரர்களுடன் ஹஸ்னாபுரத்திற்கு வருகின்றாள். இவர்களின் வருகையை ஒருபோதும் விரும்பாத துரியோதனன் பாண்டவர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறான்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #4
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நோய் போக்கும் ருத்ராட்சம்

    சிவன் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர்த்துளிதான் ருத்ராட்சமானது என புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் சக்தியை வாரணாசி இந்தியன் இன்ஸ்ட்டிடிďட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளார்கள்.

    மருத்துவரீதியாக டயாபடீஸ், கேன்சர் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. காலையில் ருத்ராட்சத்தில் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் பருகி வந்தால் அல்சர், அஜீரண கோளாறு ஏற்படாது என்கிறது, இயற்கை மருத்துவம். மேலும் பல சுவையான தகவல்களை சனிக்கிழமை தோறும் காலை 7.30 மணிக்கு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் வரும் ஸ்ரீஷாப்பி நிகழ்ச்சியில் காணலாம்.

    நிகழ்ச்சியை நடிகை மாளவிகா தொகுத்து வழங்குகிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பாட்டுத்திருவிழா


    அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, மூன்றாம்பிறை, சந்தியாராகம், வீடு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது முகவரி தந்தவர் இயக்குனர்-ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. இவரது படங்களில் பெரும்பாலும் காமிராவே பேசிவிடும். கமல், ரஜனி உள்ளிட்ட பிரபலங்களை இயக்கியவர், புதுமுகங்களையும் தனது இயக்கத்தால் பிரபலமாக்கினார்.

    பாலுமகேந்திராவின் கலை சாதனையை பாராட்டி `ஒப்பற்ற ஒளிப்பதிவு மேதைக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நாளை விழா நடைபெறுகிறது. `ஸ்ரீதேவி பைன்ஆர்ட்ஸ்' சிவசங்கர் நடத்தும் இந்த விழாவில், `சரிகமபதநிசா' இசைக்குழுவினர் பாலுமகேந்திரா படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடுகிறார்கள். பாலுமகேந்திரா இயக்கிய அத்தனை படங்களுக்கும் இளையராஜாவே இசை என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர், பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பிரபல தனியார் சேனல் ஒன்றில் இந்த இசை நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கார் பரிசாகப்பெறும் சகலகலா வல்லவன் யார்?

    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சகலகலாவல்லவன். பொதிந்து கிடக்கும் பல்வேறு மனிதத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைசாலிகளை இரண்டு கட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் குழுவினராகவும் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

    திரைப்படம், இசை, நடனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்களான திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரமேஷ்கண்ணா, பரதநாட்டியக் கலைஞரும், நடிகையுமான சுகன்யா, ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட இளவரசு, பாடகர் மாணிக்க விநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

    நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர்களின் திறமைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கால் இறுதி, அரை இறுதிச் சுற்றினைக் கடந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு தமிழகத்தின் சகலகலாவல்லவன் பட்டமும், முதல் பரிசாக `ஸென் எஸ்டிலோ' கார் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    இது ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் கொண்ட போட்டியாளர்களுக்கு ஒரு களம். பல திறமைகள் கொண்ட ஒருவருக்கு சவால். மாருதி ஸென் எஸ்டிலோவும், கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றது.தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதுமையான, பற்பல நபர்களிடையே ஒளிந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு: கிராவிட்டி என்டர்டெயின்மென்ட்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #7
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரஜினி எக்ஸ்பிரஸ்

    நடிகர் ரஜினியின் 61-வது பிறந்த நாளையொட்டி விஜய் டி.வி. `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றிவந்தது. இந்த வாகனத்தை படஅதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


    நாளை ஞாயிறு முழுவதும் ரஜினி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள், ரஜினி ரசிகர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுடன் `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' சுற்றி வந்த இடங்களில் பெற்ற வரவேற்புகளும் ஒளிபரப்பாகும்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #8
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    வந்தாளே மகராசி-300

    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி'' தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

    எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் நடித்த `புதிய கீதை' மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் தயாரிக்கிறார்.

    நன்றி: தினதந்தி

    -------
    "அன்பே சிவம்.

  10. #9
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்ன மருமகள்



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'

    தேவுடன் திருமணம் என்பதை ஒரு கனவாகவே நினைத்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு நேரம் கை கூடி வர, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. சடங்குகள் பல நடந்து கொண்டிருக்க, அதே நேரம் சினிமா ஆசையில் மும்பை சென்றிருந்த விசாகா வீடு திரும்புகிறாள். விசாகாவின் வருகை ராதிகாவின் குடும்பத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தன் பேத்தியின் வருகை பாட்டிக்கு மட்டும் இனிக்கிறது.

    ராதிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதலே, இதை சற்றும் விரும்பாத விசாகாவின் பாட்டி ராதிகாவுடனான தேவின் திருமணத்தை நிறுத்த பல வழிகளை கையாள்கிறார். அதன் ஒரு பகுதியாக தேவ் வீட்டிலிருந்து ராதிகாவிற்கு கொடுத்து அனுப்பப்பட்ட கொலுசை விசாகாவிற்கு அளித்து அணியச் செய்கிறார். இதைக் காணும் ராதிகாவின் அம்மா, தேவகி பாட்டியுடன் ராதிகாவிற்கு ஆதரவாக வாதிடுகிறார். தேவகியின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாட்டி, விசாகாவை தேவுடன் இணைக்கப் போகும் தன் திட்டத்தை தேவகியிடம் கூற, தேவகியோ `இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்' என்று கர்ஜிக்கிறாள்.

    இதற்கிடையில் மாப்பிள்ளையை அழைக்கச் சென்றிருந்த ராதிகாவின் அப்பா, தேவ் தன் சொத்துக்களை ராதிகாவின் பெயருக்கு மாற்றி எழுதியதை அறிந்து கொதித்துப் போகிறார். அதே சமயம் கொலுசு அனுப்பப்பட்டது தனக்கு தான் என்று ராதிகா தேவகி மூலம் அறிந்து அதிர்ந்து போகிறாள்.

    ராதிகா-தேவ் திருமண கனவு பலித்ததா? அல்லது பாட்டியின் சதித்திட்டம் வென்றதா? தொடர்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #10
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாமர மக்களிடம் இருந்து தெய்வீக ராகங்கள்



    ஸ்ரீசங்கரா தொலைக்காட்சி இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கான இசையாற்றல் மற்றும் தெய்வீக உணர்வை வளர்க்கும் விதத்தில் `பஜன் சாம்ராட்' என்ற இசைப்போட்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த இசை நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பவர்கள் பிரபல கர்நாடக இசைப்பாடகி சவுமியா, நாட்டுப்புற இசைப்பாடகி குசுமா.

    சவுமியாவிடம், "திரை இசைப்பாடல்களுக்கு நடுவராக சேனலில் வந்தீர்கள். சாஸ்திரிய சங்கீதத்துக்கும் நடுவராக இருந்திருக்கிறீர்கள். இந்நிகழ்ச்சி முழுக்க பஜனைப் பாடல்கள் பாடும் போட்டி. இதில் உங்கள் நடுவர் பணியை எப்படி உணருகிறீர்கள்?'' கேட்டோம்.

    "திரைப்பட பாடல்கள், கர்நாடக சங்கீத பாடல்கள், பஜனைப்பாடல்கள் சாஸ்திரிய சங்கீத பாடல்கள் என ஒவ்வொன்றும் ஒருவிதம். இதில் பஜனைப்பாடல்கள் இறைவனை நினைத்து உருகிப்பாடுவது. இந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணரலாம். இந்த நிகழ்ச்சியின் நோக்கம், சங்கீத வாசனையே இல்லாதவர்களும் கேள்வி ஞானத்தில் தங்கள் பாடும்ஆற்றலை நிரூபிப்பது தான். சங்கீத வாசனையே இல்லாத கன்னட தோட்ட தொழிலாளர்கள் கூட பஜனைப்பாடல்களை உள்ளம் உருக பாடியதை பார்த்து நெகிழ்ந்து போனேன்.

    குறிப்பாக ஒரு இஸ்லாமிய பெண்ணும், ஒரு கிறிஸ்தவப்பெண்ணும் உள்ளம் உருக பஜனை பாடியபோது எனக்கு மதம் தெரியவில்லை மனிதம் தான் தெரிந்தது. இசையின்பால் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு தான் தெரிந்தது.''

    நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான குசுமா 500-க்கும் மேல் பஜனைப் பாடல்கள் பாடியவர். இவரது பாடல்கள் இசைத்தட்டாகவும் வந்துள்ளது. அவர் கூறும்போது, "தெய்வீக ராகங்கள் பாமர மக்களிடம் இருந்தும் இத்தனை அற்புதமாக வெளிப்படுவதை ஒரு நடுவராக உணர்ந்த நேரத்தில் என் பிரமிப்பு பல மடங்காயிற்று. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே அவர்களை தேர்ந்த பாடகர்களாக செதுக்கியிருக்கிறது'' என்கிறார்.

    இந்த பஜனைப்பாடல் போட்டியில் பாடகர்கள் குழுவாக கலந்து கொள்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் குழுவுக்கு பரிசு 10 லட்சம் ரூபாய்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •