-
17th March 2012, 10:24 PM
#1
Moderator
Diamond Hubber
மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சி.ஜே.பாஸ்கரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வரவிருக்கும் புதிய தொடர், மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்.''மாறுபட்ட கதையம்சம் இந்த தொடரின் சிறப்பு.
நாயகன் அமைதியே வடிவானவன். வங்கி ஒன்றில் மேலாளராக இருக்கிறான். நாயகியோ துறுதுறு பார்ட்டி. சேனல் ஒன்றில் நிருபராக பணி.
அமைதியும் ஆர்ப்பாட்டமும் காதல் கொண்டு இரு வீட்டு சம்மதத்துடன் திருமணமும் முடிகிறது.
அதன்பிறகே சிக்கல். வங்கிப்பணி முடிந்து வீட்டுக்கு வரும் கணவன், தன்னுடன் மனைவி அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் பரபரப்பான அவள் வேலைப் பின்னணியில் அது கனவாகவே போகிறது.
இதனால் சின்னச்சின்ன முட்டல் மோதல்கள், உரசல்கள் தொடர்ந்து கடைசியில் `நாம் பிரியலாம்' என முடிவெடுக்கிறார்கள் தம்பதிகள். விவாகரத்துக்காக மனு செய்கிறார்கள்.
இரண்டு குடும்பமும் இவர்களின் இந்த அவசர முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்களை ஒன்று சேர்க்க போராடித் தோற்கிறது. தம்பதிகள் தங்கள் உண்மையான காதலை உணர்ந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தனரா என்பது பரபரப்பான திரைக்கதை.
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது, இந்த காதல் தொடர்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012 10:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks