-
17th March 2012, 10:23 PM
#11
Moderator
Diamond Hubber
அரையிறுதிச் சுற்றில் `ஜெயிக்கப் போவது யாரு?'
ஜெயா டி.வி.யில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ஜெயிக்கப் போவது யாரு?. சின்னத்திரை வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு கலைகளின் தலைசிறந்த கலைஞர்கள் சங்கமிக்கும் பிரம்மாண்ட மேடை இது.
நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பல வித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து, வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.
நேயர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி தற்போது அரை இறுதி சுற்றை எட்டியுள்ளது. அரை இறுதி சுற்றிற்கு மொத்தம் இருபது குழுவினர் முன்னேறியுள்ளனர்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஐந்து குழுவினர் என மொத்தம் நான்கு அரை இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் மூன்று குழுவினரை நடுவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் இதில் ஒரு முக்கிய நிகழ்வாக எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு என புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று குழுவினரில் இருந்து மக்கள் தங்களுக்கு பிடித்த திறமையான இரண்டு குழுவினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களே எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பின் அடிப்படையில் தங்களின் மனம் கவர்ந்த திறமையான எட்டு குழுவினருக்கு பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பினை பெற்றுத் தருகிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012 10:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks