-
13th November 2015, 08:15 AM
#1
Senior Member
Platinum Hubber
ஊரெங்கும் திருவிழா
வண்ண வண்ண ஒளிவிழா
கண்ணைக் கூசும் பட்டாசு
காதைக் கிளிக்கும் டப்பாசு
தெரு நிறைக்கும் ஒரு விழா
தீபாவளியென்றும் இனிய விழா
கொண்டாடிக் களித்துக் களைத்து
ஊர் உறங்கச் சென்ற பின்னே
விழித்தெழுந்தது சென்னை வானம்
இருள் பிரியா அதிகாலை வேளை
இன்னுமொரு தீபாவளி ஜனனம்
அந்தரத்தில் சுற்றின சக்கரங்கள்
ஒளி ஊற்றாய் சிதறின பூச்சட்டிகள்
தொடர்ந்தன கடகட லட்சுமி வெடிகள்
இடைவிடா தவுசண்ட்வாலாக்கள்
அரங்கேறியதோர் ஆனந்த தாண்டவம்
இயற்கையின் பரவச கூத்தாட்டம்
தாரை தாரையாய் மழையருவி
பறையாய் தரையில் கொட்டிட
நிற்காத நீர்க்கோடாய் நீண்டிட
கண்ணை மூடி லயிக்கவோர் கச்சேரி
என்றும் எனக்கது ஆகும் நீலாம்பரி
சுகமிதுவே சுபமிதுவே பூலோகத்திலே
குளிரட்டும் கொதித்த நெஞ்சங்களே
மலரட்டுமெங்கும் மனிதநேயங்களே
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
13th November 2015 08:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks