தோல்வியே துணிவாயோ என்னுடன் மோத
ஆற்றோர நாணல் நான் அறியாயோ இன்னும்
அமிழ்ந்து அமிழ்ந்து நிமிர்வேன் மூழ்காமலே
முறிந்திடும் முருங்கை மரமென்றெண்ணாதே
துவளேன் தொடர் துன்பம் வந்திட்டாலுமே
காலனை காலாலுதைத்த பாரதி பக்தையிவள்