-
7th May 2016, 11:19 AM
#13
Senior Member
Senior Hubber
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
பதினொன்றாம் பாடல்
*
நானாக நானிருக்க முயன்றி ருந்தேன்
…நலமுடனே அகந்தையினைக் கொண்டி ருந்தேன்
தேனாகத் தந்தாரே எனது நண்பர்
…திவ்வியமாய் ஈசனவன் பாடல் பற்றி
மானாகத் துள்ளிநீயும் படித்துப் பார்த்து
…மனதுக்குள் புகுத்தியிங்கு எழுதிப் பார்ப்பாய்
வீணாகக் கலங்காதே கண்ணா உன்னால்
…விளங்கவைக்க முடியுமடா என்றே சொன்னார்
ஏகமாய் நீருண்டு கடலுக் குள்ளே
… எறும்பினால் அதைக்குடிக்க இயலா தன்றோ
தாகமாய் இருந்ததாலே சற்றே இந்த
தாழ்சடையான் நீ\ள்முடியோன் பாடல் கொஞ்சம்
தேகத்தில் நெஞ்சத்தில் உட்செ லுத்தி
…தெள்ளியதாய் எழுதுதற்கு முயற்சி செய்தேன்
ஈசனுக்கும் நண்பருக்கும் நன்றி மீண்டும்
..எழுத்தினிலே பிழையிருந்தால் பொறுப்பீர் நீரே..
*
இப்படி இந்த இடர்களையும் பாடல்களைப் பாடுவதால் என்ன ஆகும் தெரியுமா மன்ச்சு
தெரியுமே உன்னோட பாவம்லாம் போய்டும்.. முடிச்சுட்டு நீ ஃப்ரெஷ்ஷா பாவம் பண்ணலாம்..
யோவ்.. ரொம்ப வாருகிறாய்..
ச்சும்மாடா செல்லம்.. உன்னைப் பத்திஎனக்குத் தெரியாதா..வா..உள்ளே போகலாம்..
*
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் ந லத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே
**:
நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கக் கூடிய முடிதரித்த சிவபெருமான் இருக்கும் நெடுங்களத்தைப் பற்றி சீர்காழியில் இருக்கும் பாட்டுடைத்தலைவன் ஞானசம்பந்தன் பாடிய நன்மை தரவல்ல இந்தப் பத்துப் பாடல்களைப் பாடல் வல்லோர்க்கு பாவங்கள் எல்லாம் தொலைந்து போவது உறுதி.
*
ஓம் நமசிவாய..
*
முற்றும்..
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks