செந்தில்வேல்,

என்னையும் பெரிய இடைவெளியில்லாமல் பதிவிட கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பல்வேறு அலுவல்கள் காரணமாக இடைவெளி விழுந்து விடுகிறது. குறிப்பாக அந்த நாள் ஞாபக தொடரை அதிக இடைவெளியில்லாமல் எழுதுமாறு ஆதிராம், தம்பி பெங்களூர் செந்தில், நீங்கள் மற்றும் வாசு போன்றவர்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அப்படிதான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். வேலை பளு மட்டும் காரணமில்லாமல் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்ததை மீண்டும் பதிவு செய்யும்போது அதில் ஏதும் தவறு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இருக்கும் ஒரே source மனதில் பதிந்து இருப்பதுதான். எப்படியோ சீரிய இடைவெளியில் அதை தொடர முயற்சிக்கிறேன்.

அன்புடன்