-
9th September 2015, 08:42 PM
#1
Senior Member
Seasoned Hubber
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி
அத்தனை வெளியீட்டிலும் வசூல் அள்ளும் சுரபி
எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தெள்ளமுது
எந்தத் தலைமுறையும் பருகத் தவறாத தேனமுது..
இவ்வாண்டு மட்டும் திருச்சி மாநகரிலே கெயிட்டி, ஸ்ரீரங்கம் ரங்கராஜா, அருணா, முருகன் என மீண்டும் மீண்டும் விநியோகஸ்தரின் கல்லாவை நிரப்பிய ஆனந்த், இன்று முதல் மீண்டும் பாலஸ் விஜயம்.
தகவல் அண்ணாதுரை அகில இந்திய சிவாஜி மன்றம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th September 2015 08:42 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2015, 11:14 PM
#2
ஆதிராம்,
திருவையாறு தேர்தல் பற்றி பேசும்போது தமிழகத்தில் நடிகர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி ஒரு பதிவு செய்திருந்தீர்கள். அதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நடிகர்களுமே [எம்ஜிஆர் உள்பட] ஏற்கனவே இயங்கி வந்த மக்கள் மத்தியில் அறிமுகமான கட்சி வேட்பாளராக நின்று வாக்காளர்களிடையே பரவலான பரிச்சயம் உள்ள சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றார்கள். ஒரு சிலர் கூட்டணி கட்சியாக இருந்தாலும் அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் முதன்மை கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யாரும் புதிய கட்சி அல்லது புதிய சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லை.
இதில் ஒரே ஒரு விதிவிலக்கு. அவர் பெயரை நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது போடுவதற்கு விருப்பமில்லையா என்று தெரியவில்லை. எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல் எந்த கட்சியிலும் பணியாற்றாமல் புதிய கட்சி ஆரம்பித்து எந்த கட்சியுடனும் கூட்டணியும் வைக்காமல் தனித்து போட்டியிட்டு புதிய சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரான ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே ! நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் வரலாற்று உண்மை.
ஆனால் விஜயகாந்திற்கும் முன்னோடி என்றால் அது என்டிஆர் தான். எந்த அரசியல் இயக்கத்திலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் இல்லாமல் 1982 ம் ஆண்டு மார்ச் மாதம் தனிக் கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியையும் பிடித்தவர் என்டிஆர். உலக வரலாற்றிலே அரசியல் அனுபவம் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்த ஒன்பதே மாதங்களில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்தவர் என்டிஆர் ஒருவரே!
அன்புடன்
Last edited by Murali Srinivas; 9th September 2015 at 11:17 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th September 2015, 11:12 PM
#3
ராகவேந்தர் சார்,
இந்த வருடம் அல்ல சார்! ஏப்ரல் இறுதியில் ஆரம்பித்து நான்கே மாதங்களில் இந்த ஐந்து திரையரங்குகளில் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டு வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த். மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை ஒரு கின்னஸ் சாதனைதான்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th September 2015, 12:47 AM
#4
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு-6
தாளமும்,வேகமுமாய் மனுஷனை அசத்திய பாடலிது.
"லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள் ஊரில் வந்த போது,
இதன் இயக்குநரான அமரர்.ராஜசேகர் இயக்கிய "மாவீரன்"
இன்னொரு திரையரங்கில்
ஓடிற்று.
ஒரே ஒரு தெரு தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் வந்து விடுகிற திரையரங்கில் ஓடிய
மாவீரனுக்குப் போகாமல்
இரண்டரை கி.மீ.தாண்டி நான்
போய் லட்சுமி வந்தாச்சு பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.
இந்தப் பாட்டு- கூடுதல் சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
--------
மிகச் சிரமப்படுத்தும் நீளமான
ராகப் பாதையில் கவனமாய்ப்
பயணிக்கும் அமரர்.மலேஷியா
வாசுதேவன் அவர்களின்
கம்பீரக் குரல்..
மழைக்குப் பிறகான மண்வாசனை தரும் இதத்தை
மனதுக்குத் தந்த ரவீந்திரன்
அவர்களின் இனிய இசை..
ஜெயசித்ராவும்,ரேவதியும்
பச்சை பரப்பிய புல்வெளியில்
சுழன்றாடும் நாட்டியம்..
நாயகராய் நம் நடிகர் திலகம்..
வெற்றிக் கூட்டணியில் ஜெயிக்கிறது பாட்டு.
-------
குதிக்கும் உடம்பும்,கொத்து முடி சதிராட்டமும், தாளம் போகிற போக்கிற்குத் தானாய்
மாறும் முகபாவமுமாய்..
பின்னுகிறார் நம்மாள்.
"நீ ஒரு"-வலது கையால் அழகான அபிநயம்.
"பிருந்தாவனம்"- இரண்டு
கைகளாலும் ஒரு புல்லாங்குழலைக் கற்பித்து,கிருஷ்ணன் போல் வாசித்து,
முகத்தில் ஒரு நடன அசைவு.
ஒரே ஒரு வார்த்தை.
ஒரு நூறு விளக்கம்.
அய்யன் தரும் ஆச்சரியங்கள்
எங்களுக்குப் பழக்கம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
10th September 2015, 02:36 AM
#5
Junior Member
Veteran Hubber
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
செந்தில்
FOR IMMEDIATE RELEASE 20 August 2015
Indian Scientists to Receive Prestigious Water Quality Award
ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.
நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்
Last edited by sivajisenthil; 10th September 2015 at 02:42 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
10th September 2015, 06:14 AM
#6
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas
மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015, 09:42 AM
#7
Junior Member
Senior Hubber
Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas
மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.
ஒரு சிறந்த நாவலை படித்து
முடித்தாற் போலிருக்கிறது..
நம் நடிகர் திலகத்தின் சாதனை
நீள் பட்டியலை வணக்கத்திற்குரிய முரளி சார்
வழங்கியதைப் படித்த பிறகு.
திரு.ராகவேந்திரா சார்..
நீங்கள் சொன்ன மாதிரியே
நடிகர் திலகத்துள் ஆழ்ந்து
லயித்து எதையாவது எழுதிக்
கொண்டிருக்கும் என் போன்றவர்கள்.. இதை விடப்
பிரமாதமாக என்ன எழுதி விடப்
போகிறோம்?
முரளி சார்..
நீங்கள் சொன்னது உண்மைதான்.
நான் ஆசை,ஆசையாய் விசாரித்ததில் எத்தனையோ நடிகர் திலகத்தின் பழைய
படங்கள் தோல்விப் படங்கள்
என்று சொல்லப்பட்டன.
அவையெல்லாம் தங்களின்
வெற்றிப்பட்டியலில் இருக்கின்றன.
பழகிப் போய்விட்டால் பெருமூச்சு விடுதலே சுவாசிப்பாகி விடும்.
பொய்கள் பழகிப் போய்விடின்,
உண்மைகள் நகைச்சுவைத்
துணுக்குகள் போல் ஆகி விடும்.
உங்கள் இதய வங்கியில்
தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் விஷயப் பொக்கிஷங்களை எல்லோருக்குமாய் செலவழித்திருக்கிறீர்கள்.
நன்றிகள் கோடி.
என் வணங்குதல்கள்.
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2015, 06:18 AM
#8
Senior Member
Seasoned Hubber
ஆதவன் ரவி
புதிய தலைமுறை ரசிகர்கள் நமது மக்கள் தலைவரின் திரைப்படங்களை எந்தக் கோணங்களில் அணுகுகிறார்கள், எப்படி ரசிக்கிறார்கள் என்பது சற்று புரியாமல் தான் சில காலங்களுக்கு முன் இருந்தது. தங்களுடைய பதிவுகளின் மூலம் தெள்ளத் தெளிவாக தாங்கள் அதைக் கூறி விட்டீர்கள். காலத்தைக் கடந்து நிற்கும், வெகுவாக புறக்கணிக்கப்பட்ட அவருடைய பின்னாளைய படங்களின் சிறப்பினை மிக அழகாக தொகுத்து தாங்கள் வழங்கி வருவதின் மூலம் முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையிலும் தான் சிங்கம் தான் என்று நிரூபித்த அந்த மாபெரும் கலைஞனின் பெருமை பாரெங்கும் பரவலாக சென்றடைகிறது.
தங்களுடைய இந்த உன்னதமான பணிக்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.
லட்சுமி வந்தாச்சு, அப்போதைய புதிய தலைமுறை இயக்குநரின் புதிய அணுகுமுறை, புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்பிற்கு சரியான தீனி போட்ட படம்.
Subtle என்கின்ற நுட்பமான சங்கதிகளைத் தன்னுடைய Subdued எனப்படும் அடக்கமான இயல்பான நடிப்பின் மூலம் எடுத்துக்கூற இன்னுமோர் வாய்ப்பை அளித்த திரைப்படம். லட்சுமி வந்தாச்சு.
Last edited by RAGHAVENDRA; 10th September 2015 at 06:23 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2015, 08:03 AM
#9
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sivajisenthil
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
செந்தில்
FOR IMMEDIATE RELEASE 20 August 2015
Indian Scientists to Receive Prestigious Water Quality Award
ALEXANDRIA, Va. – Indian Scientists
Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad),
Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and
Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious
McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill.
www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.
நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்
Dr. Senthil,
This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.
Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?
Regards.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th September 2015, 08:26 AM
#10
Junior Member
Veteran Hubber
Dr. Senthil,
This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.
Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?
Regards.
tacinema
Thank you Sir for your greetings. I just did my duty as the thesis guide for these gems of students who have their own latent talents and I feel proud for being instrumental to have brought out their potential to this level. The present generation youngsters prove that they cannot be misjudged or underestimated! They just make us sit back and enjoy the ride!! All pride dedicated to my University and the science and engineering community of our nation.
I am not attending this function abroad as I am nearing my superannuation retirement by the end of this month and I have to join as a Guest faculty in another Institute...but my students will go and attend!
regards,
senthil
Bookmarks