Results 1 to 10 of 30

Thread: சொல்ல துடிக்குது மனம் !

Threaded View

  1. #30
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    சம்பவாமி யுகே யுகே !

    மறையது உண்டு அவனியில் இன்று
    அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
    ஆண்டவன் அவதாரம் என்று!

    மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
    மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
    மகா பாரதத்தில் அன்று !

    மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
    மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
    மாயன் தங்கையால் : நன்று !

    அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
    அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
    அன்புடன் சொல்வீர் !




    கண்ணன் சொன்னது கீதையில் :

    பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்|
    தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||4-8||

    (நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)
    Last edited by Muralidharan S; 27th April 2016 at 11:35 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •