Results 1 to 10 of 30

Thread: சொல்ல துடிக்குது மனம் !

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    ஆறு வார்த்தைகள் !

    ஆறப்போவது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
    தீரப்போவது எப்போது இப்பாவம் ?
    சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
    நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?

    இளையாழ்வான் கணைகளை கொடுக்க
    எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
    அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
    ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்

    வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
    வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
    விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
    வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !

    'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
    அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
    அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
    ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !

    அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
    அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
    ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
    அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ

    ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
    'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
    எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
    தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை

    ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
    ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
    ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமாஸ்ரைய! '
    ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !

    பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
    பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
    ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
    அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !


    Last edited by Muralidharan S; 6th November 2015 at 06:16 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •