-
5th June 2015, 11:43 PM
#1
Senior Member
Senior Hubber
ஏழு மலைதனிலே – அவன்
நின்றிருப் பானருள் தந்துநிற்பான்
மேலும் வேண்டிநின்றால் – நம்
மேன்மைகள் துலங்கிட வழியும் செய்வான்
சூழும் துன்பங்களை – தூளாய்
தூற்றியே மாற்றியே காட்டிடுவான்
வீழும் வேதனைகள் – மாறி
விந்தையாய் இன்பமும் தந்திடுவான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2015 11:43 PM
# ADS
Circuit advertisement
-
5th June 2015, 11:43 PM
#2
Senior Member
Senior Hubber
போதுமா கல் நாயக் புதுசான கவிதைகள் சிந்துப் பாவியலில் ட்ரைப் பண்ணிப்பார்த்தேன்
-
6th June 2015, 02:39 PM
#3
Senior Member
Senior Hubber
மோகமாய் வந்தனள் ராதை – கண்ணன்
வேகமாய்ப் போகின்ற பாதை – பார்த்து
தேகத்தில் கொண்டாளே கோதை – கொஞ்சம்
வாதை பின்னர்
சூதை மேலும்
வெட்கியே அவன்பின்னே ஓடியது காதை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2015, 11:38 PM
#4
Senior Member
Senior Hubber
ஓமானில் ஒரு கற்பனை ஓட்டல் கட்டிப் பார்த்தேன்!
*
ஓமானில் உள்ளவொரு ஓட்டல் – அங்கே
…ஓயாமல் கிடைத்திடுமே நல்லமிள கூட்டல்!
ராமா வெனச்சொல்லி பாட்டி – அதை
…டக்கெனவே செய்திடுவாள் பல்சுவைகள் கூட்டி
உளுந்திலே செய்திட்ட வடையாம் – அதில்
..உழுதபடி நின்றிருக்கும் சாம்பாரும் மடையாம்
கிளுகிளுப் பாககுலோப் ஜாமூன் – கண்கள்
சிமிட்டவே ஆசைகள் பொங்கிடும் ஆமென்!.
மல்லிகைப் பூச்சாயல் இட்லி – உடன்
..மங்கையின் இதழ்வண்ணக் காரத்தில் சட்னி
விள்ளவே கண்டிருப்பார் எல்லாம் – பின்னர்
…வேகமாய் உள்செல்ல போய்விடும் பட்(டி)னி..!
ஆசையாய் இளநங்கை போலே – நன்கு
..ஆர்ப்பாட்ட மில்லாத முறுவலில் தோசை
ஓசைகள் கேட்டிடும் பாரு – எண்ணெய்
..விட்டிட நாவிலே ஊறிடும் ஜோரு..
பாஷைகள் வேண்டாமே இதற்கு – அந்த
..பாதுஷா இனிப்பினில் சொர்க்கமே எதற்கு
காசுபணம் பார்த்திடவும் கண்டோம் – நல்ல
…கானத்தின் இனிமைபோல் சுவைகள்பல தின்றோம்.!
ஓமானில் நல்லவொரு ஓட்டல் – அதில்
..உண்டவர்கள் மனதிலே நல்லசீ ராட்டல்..
ஏமாற்றம் எக்காலம் வாரா- அதன்
..ஆறாத சுவைபோல எவ்விடமும் வாரா
**
Last edited by chinnakkannan; 5th June 2015 at 11:41 PM.
-
6th June 2015, 02:38 PM
#5
Senior Member
Senior Hubber
பதறிடப் பதறிட நிற்கும் – மனம்
பணிவினைக் கூட்டியே சொக்கும் –இது
அடியேன் அறியாத சந்தம்- இதில்
ஆழ்ந்தே – நெஞ்சும்
சூழ்ந்தே – கொஞ்சி
படித்தபின் மேலெழுதிப் பார்க்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 11:22 AM
#6
Senior Member
Senior Hubber
பெண்ணை பூவை என
புனைந்தது ஏனோ
புரிந்திட விழைந்ததில்
அறிந்திட்டேன் இவ்வொற்றுமை
சொந்தகாரன் மண்ணோடு
எடுத்து கொடுப்பது
நிச்சயித்த திருமணம்
புது மண்ணில் நட்டாலும்
பழய மண்ணின் வாசம்
சில/பல காலம் வீசும்
(வேரோடு வந்த மண்ணின் அளவை பொருத்து)
வேரோடு பிடுங்கி
செல்வது காதல் திருமணம்
வேரோடு மண் ஒட்டுவதும் உண்டு
மண் வேரை வெட்டுவதும் உண்டு
ஒட்டிய மண் மனப்பதும் இல்லை
வெட்டிய வேர் உயிர்ப்பதும் இல்லை
(இருதரப்புக்கும் பொது)
(தரம்)
தோட்டத்தில் செழித்த செடி
வீட்டினில் வாடியது ஏனோ
மண்ணின் மகத்துவம்
புரியாது மகசூல் செய்யலாமோ
(ஆதரவு/அரவணைப்பு)
தண்ணீரை ஊற்றுகிறேன் என்று
வெந்நீரை ஊற்றினால்
வாடித்தான் போகும்
தண்ணீரை தாராளமாய்
ஏராளமாய் ஊற்றினால்
அழுகிதான் போகும்
(கண்டிப்பு)
பூச்சியை கொல்லும்
பூச்சி கொல்லியின்
தெளிச்சல் தரம் தாண்டினால்
செடி மரமாகும் ஆனால்
மரம் விஷமாகும்
சத்தில்லா மண்ணால்
மரம் மலடகும்
மண் பற்றா வேரால்
மண் கரைந்து மறைந்திடும்
செழித்த மண்ணும்
அதில் திளைத்த வேரும்
அளவாய் தெளித்த நீரும்
என்றும் இன்பமாய் சுகித்திடும்.
(வெகு நாளாய் எழுத நினைத்தது ...சிறு கவிதையாய் எழுத காத்திருந்தேன் ஆனால் முடியவில்லை கட்டுரையாகி போனது...மன்னிக்கவும்)
-
கிறுக்கன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015, 11:54 AM
#7
Senior Member
Senior Hubber
சி.க.,
நிறைய, நிறைய கவிதைகள் எழுதியதற்கு நன்றிகள். ஆனால் போதும் என்றுமட்டும் சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஷண்முகனையும், எழுமலையானையும் சிந்துப்பாவில் அழைத்தது அருமை. அருமை.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th February 2016, 11:10 AM
#8
Senior Member
Senior Hubber
வினோதினி...தொடர்ச்சி..
**
************
வினோதினி..
************
இந்த அம்மா எப்பவும் மோசம்
அடிக்கடி சாதம் வைக்கிறாள் லஞ்ச்க்கு
பக்கத்து வீட்டு ராகுல் எல்லாம்
எப்பவும் புதுசாய் கொண்டுதான் வர்றான்
நேத்த்க்கு கூட கொஞ்சம் போண்டா
கொடுத்தான் நானும் தோசை தந்தேன்.
அப்பா கொடுத்த பென்சில் பெட்டி
அடடா அழகு.. அந்த யானை
ஹிஹி சொல்லிச் சிரிப்பதாய் இருக்கு
இன்னும் ஏதோ வாங்கணும்னு நினச்சேன்
மறந்து போச்சு அச்சோ முதல்கிளாஸ்
மீசை வச்ச மல்லிகா டீச்சர்
அம்மா கேட்டால் அடிப்பாள் அடியே
அப்படி எல்லாம் சொல்லப் படாது
ஏன்மா லேசா இருக்கே அவர்க்கு
சிரித்துத் தலையில் குட்டியும் விடுவாள்..
***
ஹோம்வொர்க் எல்லாம் பண்ணி விட்டேன்
டீச்சர் வேற என்னவோ சொன்னாள்
ஏண்டா கோபு அதுதான் என்ன..
இந்தக் கணக்கும் தலையைக் குழப்புது
***
அதுசரி அங்கே மேலே என்ன
ஹையா நெருப்பு என்னது இப்படி
சடசட வென்றே கூரையில் போகுது..
பயந்த நாங்கள் எழுந்து ஓடி
வாசல் பக்கம் முட்டி மோத
என்னது இந்தக் கதவு திறக்கலை
பதறி அழுதே பலப்பல குரல்கள்
உதவி உதவி என்றே கத்த
உள்ளே சூடு அய்யோ எரியுதே..
கோபு சொல்றான் கத்தா தேன்னு
நீட்டி அவனது கையைப் பிடித்தேன்
மோதிய மோதலா யாரோ திறந்தாரா..
ஏதும் தெரியலை தெரிந்து தான்என்ன
நாங்கள் எல்லாம் ஒண்ணாய் வெளியில்
போவதற் காக கத்தியே முந்த
வெளியில் மாடிப் படியில் இன்னும்
மத்த கிளாஸின் பசங்களின் கூட்டம்
அப்பா ஒருவழி நானும் வெளியில்
வந்தாச்சு என்றே நினைத்தால் அய்யோ
என்னோட ஆனை பென்சில் பாக்ஸ்தான்
அப்பா கேட்டா திட்டு வாளே
போகா தேடீ கோபி சொன்னான்
ம்ம் மாட்டேன்..அப்பா சொன்னா
என்றே சொல்லி கையை உதறி
மறுபடி மோதி கிளாஸிக்குள் போனால்
ஒரேயடி யாகப் புகையும் நெருப்பும்
புக்ஸீம் பாக்ஸீம் சிதறி இருக்க
ஹையா அங்கென் பென்சில் பாக்ஸே
வேகமாய் ஓடி எடுக்க அச்சச்சோ
என்னது இப்படிக் கூரை விழுதே..
அம்மா..அப்பா...அய்யோ..ஆஆ..
*********************
ஜெயஸ்ரீ சேஷாசலம்..
*********************
இறைவன் ஒருவன் இருக்கின் றானா..
எதற்காக இப்படி இவ்வளவு உயிரை
ஒரேயடி யாக எடுத்து இருக்கணும்
எண்பதுக்கும் மேலே சின்னப் பிஞ்சுகள்
பொசுங்கி நொறுங்கிய அவலம் என்னே..
பேசி முடித்து விழியைத் துடைக்க
காமெரா மேனோ கட்பணணி விட்டான்..
***
எனக்கு வேலை டிவியில் செய்திகள்
சுடச்சுட நடக்கும் இடத்தில் எடுக்கணும்
பலப்பல விபத்துகள் பலப்பல தேர்தல்கள்
பலப்பல ஊழல்கள் பலப்பல நிகழ்வுகள்
எல்லா வற்றையும் கண்டே மனமும்
மரத்துப் போய்த்தான் ஓடுது பொழுது
***
திரும்பிப் பார்த்தால் அமுதம் அஜயன்
ஹல்லோ அஜயா என்ன இங்கே..
சரிசரி எல்லாம் ரிப்போர்ட் எடுத்தாயா
எனிதிங்க் ஸ்பெஷலா சொல்லுப்பா எனக்கும்
கையில் என்ன ஹைக்கூவா கொண்டா
வெள்ளை மனங்கள்.. கறுப்பு உடல்களாய்..
வண்ணப் படங்களில்... அபாரம் அஜயா..
அங்கே பாரேன் அழுதே வறண்டு
அந்த மூலையில் அமரும் தம்பதி..
ஆஸ்பிட்டல் வாசம் குடலைப் புரட்டுது
வாவா போய்த்தான் விஷயம் கேட்போம்..
***
மேடம் நான் தான் இந்த டீவி..
உங்கள் துயரைச் சொல்ல முடியுமா..
கணவன் சொன்னான்: எங்கள் பொக்கிஷம்
கறுப்புத் தங்கம்; வீட்டின் ராணி..
காற்றில் கருகிக் கரைந்தே விட்டாள்
பெயரும் வினோதம் செய்யும் லீலைகள்
எல்லாம் வினோதம் இப்போ பார்த்தால்
கறுப்பாய்க் கருகிக் கரைந்ததும் வினோதம்..
***
விம்மல் அடுக்கிப் பேசிச் செல்ல
'உங்கள் நஷ்டம் பெரிதெனத் தெரியும்
சிலபல லட்சம் ஈடாம் சொன்னார்..'
'பணத்தை நானே உங்களுக்குத் தருவேன்
எங்கள் சின்னக் குட்டியைத் தாங்கள்.."
வெடித்தாள் மனைவி; கணவனோ சொன்னான்
அந்தப் பணந்தான் எங்களுக்கு வேண்டும்..
***
அடடே இதுவோர் ஸ்கூப்நியூஸ் ஆச்சே..
சொல்லுங்கள் ராமு உங்கள் எண்ணம்..
இந்தப் பணத்தை இந்தப் பள்ளிக்கு
கொடுப்பேன் நன்றாய் மறுபடி கட்ட..
இன்னும் பலவாய் பள்ளிகள் உண்டு
'நோநோ ராமு மேலிடம் இப்போ
எல்லாப் பள்ளிக்கும் கடுமை விதிகள்
போட்டு இருக்கு கவலை வேண்டா.."
***
'இனிமேல் என்ன கவலை வாழ்வில்
இருக்கும் பிடிப்போ கருகிப் போச்சு
உங்களுக் கென்ன இதுவோர் செய்தி
அடுத்த விபத்தில் இதுவொரு கோப்பு
எத்தனை விதிகள் போட்டால் என்ன
மறுபடி இதுபோல் பள்ளிகள் முளைக்கும்
விதியை மீறி விதியை அழைக்கும்..
இந்தக் காயம் எங்கள் வாழ்வில்
முழுதும் முழுதும் வலித்தே இருக்கும்..
இன்னும் ராமு ஏதெதோ சொல்ல..
***
மெல்லத் திரும்பி காமிரா மேனிடம்
'நிறுத்துப்பா அப்புறம் வம்பாப் போயிடும்
எதுக்கும் ஒண்ணுசெய் இந்தாள் பேச்சை
வெட்டி விட்டுடு' என்றே சொல்லி
திரும்பி ராமு கமலா விடமே
நன்றி நவின்று இடம்விட் டகன்றேன்..
(முற்றும்)
-
15th February 2016, 11:19 AM
#9
Senior Member
Senior Hubber
ஒரு முதியவளின் படுக்கையறை..
** (2005 இல் எழுதியது)
மூத்த பேரன் மடியில் தலையும்
இடதுகை விரல்கள் ரவிக்கையில் நுழைத்தும்
கண்கள் கொஞ்சம் இறுக்கவே மூடி
நன்றாய்த் தூக்கம் போட்டு விட்டாச்சு..
இரண்டாம் பேரனோ அவளது மடியில்
டிவி சீரியல் வெறித்துப் பார்த்தே
கொஞ்சம் கொஞ்சமாய் இமைகள் மூட..
பத்தரை வாக்கில் முழுவதும் முடிய
அவளும் டிவியை படக்கென அணைக்க
மெஞ்ஞ மெஞ்ஞேஎன இருந்த அவனும்
எதுவும் சொல்லத் தோன்றாமல் சற்றே
வாரப் புத்தகம் எடுத்துப் புரட்ட..
அவளும் எழுந்து சின்னதை உள்ளே
விட்டுவிட்டு வந்து பெரியதை வாங்கி
உள்ளே நுழைகையில் ஒருவிழிப் பார்வை
அவனிடம் வீச படக்கென புத்தகம்
ஹாலில் இருந்த மேஜையில் வீசி
சட்டென அவளுடன் அறையுள் நுழைய..
கதவு கொஞ்சம் கொஞ்சம் மெல்லமாய்
பின்னர் சற்றே வேகமாய் மூட..
ஆச்சு இனிமேல் உறங்கி எழுந்து
காலை வேலை பார்த்திட வேண்டும்
இருப்பது ஒருஹால் ஸிங்கிள் பெட்ரூம்..
ஹால்தான் எனது இருப்பிடம் இரவில்..
மெல்லப் படுக்கையை உதறி விரித்து
தலையணை கொஞ்சம் சரியாய் வைத்து
மெல்ல எழுந்து விளக்கை அணைத்து
மெல்ல நடந்து படுக்கையில் தலையை
வைத்தால் உள்ளே மெல்லமாய்க் குரல்கள்..
என்னைப் பற்றி ஏதும் பேச்சா..
இல்லை சின்னவன் முழித்தழ றானா....
என்ன வாழ்க்கை என்றே தெரியலை
அவரும் போய்த்தான் வருடங்க ளாச்சு..
பேரன் பேத்திகள் பார்த்து விட்டாச்சு..
இப்போது இருப்பவன் என்னுடைய சின்னவன்
கடைசியாப் பிறந்த நல்லவன் என்னை
நன்றாய் வைத்துப் பார்த்துக் கொள்கிறான்..
மற்றவை எல்லாம் அவரவர் மனைவிகள்
முந்தானை பிடித்தே சென்றுதான் விட்டார்..
என்ன கொஞ்சம் பேசவே மாட்டான்
காலையில் ஆபீஸ் கிளம்பினான் என்றால்
இரவில்தான் வேலை முடித்து வர்றான்..
இந்தப் பெண்ணும் என்னுடைய உறவுதான்..
ஆரம் பத்தில் சரியாய் இருந்தாள்..
மூத்ததைப் பெத்த ஒருவரு டத்தில்
சின்னது வந்ததும் நிறையவே மாற்றம்..
ம் யாரைச் சொல்ல யாரை நோக..
சத்தம் கேக்குதே குழந்தை அழறதோ..
மேலே பேனும் மெல்லமாய்ச்சுற்றுது..
இந்த மாம்பலக் கொசுக்கள் மோசம்..
ஸ்ஸ் அப்பா.. என்னகடி கடிக்குது..
ஓடோ மோஸ்தான் தடவிக்க வேணும்..
சீரியல் பெண்ணின் கணவன் நாளை
சம்சாரத் துடன் சேர்ந்திடு வானா..
ஓஓ அடடா.. மாத்திரை மறந்தேன்..
எங்கே தண்ணீர்.. குடித்தே முழுங்கலாம்..
கொஞ்சம் கைகால் படபடன்னு வருது..
தெரியலை டாக்டரிடம் பிபி சொல்லணும்..
இந்த பாழாப் போன மனுஷன்
என்னை விட்டு சீக்கிரம் போகுமா..
மூணு பிள்ளை ரெண்டு பொண்ணு..
வயணமாப் பெத்து வளத்துவிட் டாச்சு..
வளத்த கடாக்களும் மாரில்பாஞ் சாச்சு..
எப்போ காலம் வருமென நானும்..
இருந்துதான் பாக்கேன்.. ஒண்ணும் காணோம்..
ம்ம்நாளைக்கு என்ன என்ன செய்யணும்..
மூத்தவள் பெண்ணுக்கு பளஸ்டூ எக்ஸாம்
போனில் பேசி விஷ்ஷம் பண்ணனும்..
பண்ணலை என்றால் மறுநாள் திட்டுவாள்
பெரியவன் பையனுக்கு பர்த்டேன்னு நினைக்கேன்..
காலண்டரைக் கொஞ்சம் புரட்டிப் பாக்கணும்
ரெண்டாம் காஸ்க்கு இவளை விட்டு
போன்பண்ணச் சொல்லணும் இவளது அம்மா
உடம்பு தேவலை ஆச்சா என்றே
அவளுக்கும் போன்பண்ணிக் கேக்கணும் அப்புறம்..
துபாயில் இருக்கும் சின்னப் பெண்ணிடம்
கொஞ்சம் பேசணும் நாளும் ஆச்சு..
இவனுக்குக் காலையில் தக்காளிக் கொத்சு..
வெண்டைக் காயில் வதக்கல், சீரா
மிளகு ரசமும் தேங்காய்த் துகையலும்
செய்யணும் ஏனோ தூக்கமும் வரலை..
கண்கள் இறுக்க மூடிக் கொஞ்சம்
ராமா ராமா சொல்ல லாமா..
ராமா ராமா ராமா ராமா..
சுற்றிச் சுற்றி நினைவுகள் மயங்க..
மெல்லத் தூக்கம் வந்துவிட் டாச்சு..!
( நன்றி மரத்தடி.காம்)
-
8th June 2015, 11:51 AM
#10
Senior Member
Senior Hubber
கிறுக்கண்ணா,
அருமை. அருமை. இப்படித்தான் எழுதணும் பெருசு பெருசா, அழகு அழகா. நல்ல விஷயத்தை தெளிவா சொல்லனும்னா எப்படி வேணுமென்றாலும் சொல்லலாம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks