சின்னக்கண்ணன்,
இது உங்களுக்கான திரி. உங்கள் அளவிற்கு நான் கவிதை எழுத மாட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முயற்சிக்கிறேன். அதற்குள் இரண்டு கவிதைகளை பதித்து விட்டீர்கள். அழகு.
உங்களிடம் இன்னொன்றை கற்றுக்கொள்ளவேண்டும்.கவிதை எழுதுவதற்க்கான டாபிக். முதல் கவிதை ஒரு சின்ன அற்புதமான காதல் கதையே!!!
இரண்டாவது அக்கா தங்கை வாழும் வளமான வாழ்க்கையை பற்றியது. நல்ல சுவாரசியம்தான். புதுக்கவிதை.
மரபுக் கவிதைகளைப் பற்றி சொன்னீர்கள். புதுக்கவிதைகளைப் பற்றியும் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.