-
28th January 2015, 07:55 PM
#1
Junior Member
Seasoned Hubber
வாழ்த்துக்கள் கல்நாயக், இப்போதுதான் பார்த்தேன். கவிதைக்கென்று தனியே நீங்கள் திரி ஆரம்பித்திருப்பதை. நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று தெரியும். ஆனால், கவிஞரும் கூட என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆனால், ஸாரி. என்னால் இங்கு பங்கேற்க முடியாத நிலைமை. எனக்கு கவிதை எழுத வராது. உங்கள் முயற்சி சிறப்பான வெற்றியடைய மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th January 2015 07:55 PM
# ADS
Circuit advertisement
-
28th January 2015, 10:23 PM
#2
Senior Member
Senior Hubber
கயிற்றுப் போட்டி
ஒரு முனையில் அவள்
மறு முனையின் அவன்
இழுக்கையில் கோட்டைத் தாண்டி
கால்கள் சென்றுவிட
ஜெயித்தது நான்
வெற்றிப் பூரிப்பில் அவன்
தோற்றது நீ
மனதுக்குள் புன்னகையுடன் அவள்..
விட்டுக் கொடுப்பதும்
சிலசமயம்
சுவாரஸ்யம் தான்!
( ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2015, 10:26 PM
#3
Senior Member
Senior Hubber
அக்கா தங்கை..
***
என் அகத்துக்காரர் ஸ்டேட் பேங்க்
என் அகத்துக்காரர் சிட்டி பேங்க்
என் அகத்துக்காரர் சீனியர் மேனேஜர்
என் அகத்துக்காரர் அஸிஸ்டெண்ட் வைஸ் ப்ரசிடெண்ட்
என் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் அடையாறில்
என் ஒன்றரை க்ரவுண்ட் குடிசை வளசரவாக்கத்தில்
என் பையன் சர்ச் பார்க்
என் பெண் டான் பாஸ்கோ
என் அம்பாஸடர் தான் எனக்கு செளகர்யம்
இவருக்கு எப்போதும் புதுக்கார் தான்
அருகில் வா அருமைத் தங்காய்...
என்ன கண்ணில் கலங்கல்...
ஒண்ணுமில்லேக்கா...தூசு!
(ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)
Last edited by chinnakkannan; 29th January 2015 at 10:29 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th January 2015, 10:23 AM
#4
Senior Member
Senior Hubber
சின்னக்கண்ணன்,
இது உங்களுக்கான திரி. உங்கள் அளவிற்கு நான் கவிதை எழுத மாட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முயற்சிக்கிறேன். அதற்குள் இரண்டு கவிதைகளை பதித்து விட்டீர்கள். அழகு.
உங்களிடம் இன்னொன்றை கற்றுக்கொள்ளவேண்டும்.கவிதை எழுதுவதற்க்கான டாபிக். முதல் கவிதை ஒரு சின்ன அற்புதமான காதல் கதையே!!!
இரண்டாவது அக்கா தங்கை வாழும் வளமான வாழ்க்கையை பற்றியது. நல்ல சுவாரசியம்தான். புதுக்கவிதை.
மரபுக் கவிதைகளைப் பற்றி சொன்னீர்கள். புதுக்கவிதைகளைப் பற்றியும் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th January 2015, 10:28 AM
#5
Senior Member
Senior Hubber
புதுக்கவிதைக்கு இலக்கணம்னு எதுவும் கிடையாது..ஒரு சின்ன ட்விஸ்ட்..அல்லது ஏராளமான சிந்தனைகளைப் பொதிந்து இருக்கறாமாதிரியான காட்சி. இருக்கணும்.. எனக்கு மரபுக்கவிதை கொஞ்சம் நிறையவேபிடிக்கும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks