-
7th October 2014, 09:31 PM
#1
Senior Member
Seasoned Hubber
கீற்றுக் கொட்டகை என்பது நவீன மயமான சினிமாவிற்கு முந்தைய பரிமாணம். கிட்டத்தட்ட 70களின் முற்பகுதி வரையில் தமிழ் சமுதாயத்தின், குறிப்பாக கிராமங்களின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியது. அவற்றின் பிம்பங்கள் அவற்றின் பிரதிபலிப்புகளெல்லாம் கருப்பு வெள்ளைகளாகவே பெரும்பாலும் அமைந்தன. அந்நாளைய நட்சத்திரங்களைத் தங்கள் வாழ்வுடன் மக்கள் இணைத்துப் பார்க்கும் பாலங்களாக விளங்கியவை கீற்றுக் கொட்டகைகள். சினிமாவை சராசரி மனிதனின் உறவாகவே அமைத்தவை கீற்றுக் கொட்டகைகள். மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பெருமை கீற்றுக்கொட்டகைகளுக்கே உரித்தான சிறப்பு. எவ்வளவு தான் நவீன மயமாக்கல் சினிமாவின் பல்வேறு துறைகளில் வந்தாலும் - அது ஒப்பனையாகட்டும், சண்டைக்காட்சிகளாகட்டும், ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும் அல்லது எந்தவிதத் துறையாக இருந்தாலும் அது எந்த வடிவில் தயாரிக்கப் பட்டாலும் மக்களின் உள்ளத்தில் புகுந்து உறவாடும் நெருக்கத்தை நவீன மயமாக்கப்பட்ட திரையரங்குகள் தருவதில்லை என்பது உண்மை. ஆயிரம் மல்டிப்ளெக்ஸ் வளாகங்கள், ஏராளமான நவீன திரையரங்குகள் வந்தாலும் மக்களால் ஒன்றிப் போக முடியவில்லை என்பது உண்மை.
அப்படிப்பட்ட உணர்வு பூர்வமாக மக்களின் மனதில் இடம் பிடித்த கீற்றுக் கொட்டகைத் திரையரங்குகளின் மூலம் மக்களின் ஆழ்மனதில் தங்களுக்கென்று நிரந்தரமான இடங்களைப் பிடித்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. இந்த இருவரின் ஆளுமையால் தான் இன்றும் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இவர்கள் நடிகர்கள் என்ற நிலைமையத் தாண்டி மக்களிடையே தலைவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டவர்கள். அதையும் தாண்டி இறைவனாகவே போற்றப்படுபவர்கள். மக்களால் தங்கள் குடும்பதில் ஒருவராகப் போற்றி வணங்கப் படுபவர்கள்.
தமிழிலுள்ள எந்த ஒரு ஊடகமும் இவர்கள் இருவரைத் தவிர்த்து தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் பேசும் நல்லுலகம் எங்குமே தழைக்கமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவிலுள்ள எந்தப் பகுதி ஊடகமாக இருந்தாலும் அவரவர் பகுதியைச் சார்ந்த திரை நட்சத்திரங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் போன்றவற்றை அனுசரித்து அந்த நாள் முழுவதுமே அவர்களுக்கென ஒதுக்குகின்றன.
இன்னும் சொல்லப் போனால் வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த குறிப்பிட்ட நாள் முழுதும் ஒரு லோகோவைப் போல அந்த நட்சத்திரத்தின் நிழற்படத்தை நாள் முழுதும் தங்கள் ஒளிபரப்பில் இணைத்து விடுகின்றன. வானொலிகளோ அன்று முழுதும் அல்லது குறைந்த பட்சம் குறிப்பிட்ட கால அளவிலாவது அந்த நட்சத்திரத்தைப் பற்றி நேரம் ஒதுக்கி தகவல்கள் ஒலிபரப்புகள் என தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றன.
இந்த அடிப்படையில் பார்த்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இல்லாமல் பழைய தமிழ்ப் படங்களைப் பற்றிய எந்த விவாதமும் நிறைவடையாது.
இது இயல்பாகவே அமைந்து விடும். இயல்பாகவே இடம் பெறும். இயல்பாகவே நடைபெறக்கூடிய உணர்வுடன் கலந்த விஷயமாகும்.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு பதிவாளரும் தங்களுடைய விருப்பம் அபிமானம் சார்ந்த வகையில் பதிவுகளை அந்த குறிப்பிட்ட நாட்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாத ஒன்றாகும்.
இதற்கு இத்திரியும் விதிவிலக்காகாது என்பதே என் தனிப்பட்ட அபிப்ராயம்.
Last edited by RAGHAVENDRA; 7th October 2014 at 10:16 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th October 2014 09:31 PM
# ADS
Circuit advertisement
-
6th October 2014, 08:12 PM
#2
Senior Member
Seasoned Hubber
மிக்க நன்றி வெங்கிராம். தங்கள் வரவேற்பிற்கு உளமார்ந்த நன்றி...
தங்களுடைய எண்ணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் திரியைப் பொறுத்த வரையில் அந்நாளைய தமிழ்த் திரையுலகம் எவ்வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது, எவ்வகையிலெல்லாம் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, என பலவிதமான கோணங்களில் நினைவலைகளைப் பகிரந்து கொள்வதே நோக்கமாக இருக்கும். அவ்வகையில் பார்த்தால் இது நட்சத்திரங்கள் அபிமானங்கள் இவற்றிற்கப்பால் நின்று தனிமனிதனின் வாழ்க்கையில் சினிமா என்ற ஒரு அறிவியல் சாதனம் ஏற்படுத்திய ஆளுமை இவற்றையே முன்னிறுத்தும், இது இயல்பாகவே நடக்கும். தாங்களும் தங்கள் வயதில் தாங்கள் சந்தித்த அல்லது அனுபவித்த நிகழ்வுகளைப் பற்றிப் பகிரந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாகவும் இத்திரி பயனளிக்கலாம்.
நோக்கம் நல்லதாக இருப்பின் நடப்பும் அவ்வாறே என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th October 2014, 08:31 PM
#3
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
புதுமையான ,கடந்த கால டூரிங் டாக்கீஸ் நினைவுகளை எண்ணி பார்க்கும் முயற்சி . வாழ்த்துக்கள் .
1960-1975 கால கட்டத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் 450 கீற்று கொட்டைகைகள் இருந்தது . சிங்கள் புரஜெக்டர் . தினசரி இரண்டு காட்சிகள் .இரவு 7 மணி - கடைசி காட்சி 11 மணிக்கு துவங்கி விடியற்காலை வரை படம் ஓடும் .எங்கள் கிராமத்தில் இருந்த கொட்டகை பெயர் சரவணா - தரை டிக்கெட் - 15 காசுகள் . சேர் -40 காசுகள்
ஸ்பெஷல் இருக்கை 75 காசுகள் . மறக்க முடியாத நாட்கள்
-
6th October 2014, 09:07 PM
#4
Senior Member
Senior Hubber
Raghav ji arumai arumaiyana thiri...
-
6th October 2014, 09:17 PM
#5
Junior Member
Platinum Hubber
1956- CART ADVT
-
6th October 2014, 09:33 PM
#6
Senior Member
Seasoned Hubber
Vinod Sir Super... continue...
கடந்த ஆண்டு பாசமலர் நவீனமயமாக்கலில் மறுவெளியீடு செய்யப்பட்டபோது கற்பனையில் அடியேனால் வடிவமைக்கப்பட்ட விளம்பர நிழற்படம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th October 2014, 10:13 PM
#7
Junior Member
Regular Hubber
டியர் இராகவேந்தர் சார்,
தங்களால் இன்று துவங்கப்பட்டுள்ள கீற்றுக்
கொட்டகைத் திரிக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.
-
6th October 2014, 10:54 PM
#8
Senior Member
Seasoned Hubber
டூரிங் டாக்கீஸ் எனப்படும் கீற்றுக் கொட்டகை திரையரங்குகளைப் பற்றிய ஒரு கவிதை.. வேறோர் இணையதளத்திலிருந்து..
டூரிங் டாக்கீஸ்
நாலு தெருவுக்கு
நாற்பது வீடுகள்
நடுவே எழும்பியது
நமது கலைக்கூடம்.
M.G.R., சிவாஜி
இவர்கள்போல் இன்னும் பலர்
உயிர் பெற்று இன்றைக்கும்
உலா வரும் நிழற்கூடம்.
புத்தம் புதுக் காப்பி
மெத்தப் பழைய படம்
நித்தம் வருகை தரும்
மொத்த ஊரு சனம்.
மின்னும் விளக் கொளியில்
மங்கல் மணல் வெளியில்
நரை குவியல் தலைகளோடு
தரை முழுதும் மக்கள்வெள்ளம்.
கயவாடும் வில்லனை
நயமாக வீழ்த்தி
நாயகியைக் கவரும்
நாயகனைக் காணுகையில்,
காதுகள் அடைபடக்
காற்றினில் விசில் பறக்கும்
காகிதங்கள் தூள் சிதறும்
காலமெல்லாம் அது நிலைக்கும் !
நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th October 2014, 09:31 PM
#9
Senior Member
Seasoned Hubber
Thank you Rajesh for the support and encouragement.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th October 2014, 10:52 PM
#10
Senior Member
Seasoned Hubber
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபு சார். தாங்களும் பங்கு கொண்டு நினைவலைகளைப் பாய விடுங்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks