-
19th October 2015, 09:47 AM
#1
Junior Member
Devoted Hubber
-
19th October 2015 09:47 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2015, 11:18 AM
#2
Senior Member
Diamond Hubber
Usv, அவர் கமலின் வெற்றிகளால் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறார்! பாவம், தனித்து விடுங்கள் அரற்றட்டும்!
-
19th October 2015, 11:47 PM
#3
Senior Member
Seasoned Hubber
@shwas: Kamal indhia nadigar sangam nu peru maatranum nu sonnathukku pinnadi oru nyayam and artham irukku..athe pola rajini sonnathakku pinnadiyum vera oru nyayam and artham irukku.....and the reasoning do not clash with each other though the proposed step does...... .this is what i believe though i may be wrong......
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2015, 12:26 AM
#4
Senior Member
Diamond Hubber
ரஜினி சொன்ன ரெண்டு முக்கியமான வேண்டுகோள்களும் என் பார்வையில் தேவையில்லாத ஒன்று. நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும். மேலும், கோர்ட் வரைக்கும் சென்று நடிகர் சங்கத்தின் மானம் போகக் காரணமான சரத்-ரவி கூட்டணி செய்த கட்டிட ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசல.. சரி.. அந்த அளவுக்குக் கூட வேணாம்.. நடிகர் சங்க கட்டிடம் மீண்டும் கட்டப்படனும் என்ற அளவுக்குக் கூட ஒரு வார்த்தை பேசல.
ஆனால் கமல் ரொம்ப நிதானமா "இனி உள்ள பிரிவுகள் போதுமானது, இந்த எலக்ஷன் முடிந்தவுடன் மறுபடியும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்திரனும்கிறதுதான் என்னுடைய வேண்டுகோள், தவறுகளை இந்தக் குடும்பத்தில் திருத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை, அதைச் செய்வாங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு, அதற்கான சாயல்களும், நேரமும் இது என நான் நினைக்கிறென்" என நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார்.
அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை தேவையில்லாமல் சபையில் குறிப்பிட்டு அவமானப்படுத்தியவர்களை நோக்கி கமல் ஒரு வார்த்தைகூட கோபப்படல. அல்லது அவற்றை குறித்து பேசக் கூட இல்லை. "தவறுகளை இந்தக் குடும்பத்தில் திருத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை" - இந்த ஒரே வாக்கியத்திலேயே எல்லோருக்கும் சொல்ல வேண்டியதை நாசுக்காக கண்டித்தும் விட்டார். மிகவும் பக்குவமாக.
ஊடகம் எதை வெளிச்சம் போட்டு மேலும் பல விமர்சனங்களை கமல் மீது அனைவரும் வைக்க உதவுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். "தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்பதை கட்டம் கட்டி பேசுபவர்கள் "It's time to correct the MISTAKES and REBUILD" என கமல் சொன்னதை வசதியாக புறக்கணித்து விட்டார்கள்.
Last edited by venkkiram; 20th October 2015 at 12:29 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015, 12:34 AM
#5
Senior Member
Diamond Hubber
Originally Posted by
venkkiram
நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும்.
வாக்குறுதியை நிறைவேற்றலைன்னா ராஜினாமா பண்ணிடுங்கன்னு சொல்றார். அப்ப, படம் ஓடலைன்னா சூப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்துடுவாரா?! ஒண்ணுக்கு 4 படம் ஓடலை, வாங்கினவங்களுக்கு போட்ட முதலே வரலை. ஆனாலும் அடுத்த படத்துல இவர் பட்டம் போட்டுகிட்டுதானே வர்ரார்? போதாததுக்கு, உலகத்துலயே மிக எளிமையான அடக்கமான பண்பான நடிகர்ன்னு சொல்லிட்டு, ட்விட்டர் ஹாண்டிலிலேயே @superstarrajini என வைத்துக்கொண்ட அடக்கசிகாமணி இவர்! அவ்ளோ இன்செக்கூரிட்டி போல! சின்னக்குழந்தைங்க பொம்மைய விடாம கெட்டியா புடிச்சிவச்சிக்குமே அந்தமாதிரி!
-
20th October 2015, 03:08 AM
#6
Junior Member
Regular Hubber
Originally Posted by
venkkiram
ரஜினி சொன்ன ரெண்டு முக்கியமான வேண்டுகோள்களும் என் பார்வையில் தேவையில்லாத ஒன்று. நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும். மேலும், கோர்ட் வரைக்கும் சென்று நடிகர் சங்கத்தின் மானம் போகக் காரணமான சரத்-ரவி கூட்டணி செய்த கட்டிட ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசல.. சரி.. அந்த அளவுக்குக் கூட வேணாம்.. நடிகர் சங்க கட்டிடம் மீண்டும் கட்டப்படனும் என்ற அளவுக்குக் கூட ஒரு வார்த்தை பேசல.
venkki sir,
"தங்க தட்டுல தேங்கா விக்காதிங்க"-ன்னு அற்புதமான அறிவுரை சொல்லி, எப்படி இருந்த நடிகர் சங்க நிலத்தை, எங்க கூட்டிட்டு வந்து நிப்பாட்டிருக்கார்... அந்த மகான போயி, இப்படி சொல்லிட்டீங்களே
சத்திய சோதனை !!
-
20th October 2015, 12:57 AM
#7
Senior Member
Diamond Hubber
அடிச்சார் பாரு பல்டிய இப்போ நம்ம சரத்!
இதே கட்டிட விஷயத்தை ஜூன் மாசம் பாண்டவர் அணி எப்படி மீடியாவுக்கு பேசியிருக்காங்க என்பதையும் கவனிக்க.
வருடத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த இக்கட்டிட பிரச்சினை அப்போதே சரத்திற்கு தன் புகழிற்கு களங்கமாக காயமாக நினைக்கல. ஆனால் தேர்தல் ஒட்டுப்பதிவிற்கு நாட்கள் நெருங்க நெருங்க இந்த கட்டிட ஒப்பந்த நீக்கத்தை செயல்படுத்துகிறார் சரத்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015, 01:17 AM
#8
Senior Member
Diamond Hubber
IRIR, Sakala and all.. watch June month's press meet by Pandavar Team. It gives lot of pointers about how building issue became the core one to address and how Ravi-Sarath team handled initially.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th October 2015, 02:31 AM
#9
Junior Member
Senior Hubber
Through the whole thing, it is quite illogical for Sarath to bring in Kamal into the discussion and mocking him etc. All KH did was to support a competing unit. Nothing more. He did not verbally attack anyone nor did he directly enter into any fight. For that, these folks degraded him. The result is for everyone to see.
-
20th October 2015, 02:43 AM
#10
Senior Member
Diamond Hubber
Originally Posted by
kumarsr
Through the whole thing, it is quite illogical for Sarath to bring in Kamal into the discussion and mocking him etc. All KH did was to support a competing unit. Nothing more. He did not verbally attack anyone nor did he directly enter into any fight. For that, these folks degraded him. The result is for everyone to see.
கடைசி நேரத்தில் கமலையோ மற்ற கலைஞர்களையோ ரவி-சரத்-ராதிகா கூட்டணி அவதூறாக பேசியதால் மட்டுமே தோல்வி அடைந்தார்கள் என்ற அளவிற்கு சுருக்கக் கூடாது. அதற்கும் மேல. பதினைந்து வருட நிர்வாக சீர்கேடுகளின் விளைவு அவர்களை அந்த அளவுக்கு பேசத் தூண்டியிருக்கிறது. பாண்டவர் அணி வெற்றி பெற்ற இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தாணு போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புள்ளிகளையும் கட்டுக்குள் வைக்க முற்படணும். அப்போதுதான் எல்லா தரப்பட்ட கலைஞர்களுக்கும் நல்லது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks