-
26th July 2013, 12:23 PM
#1
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
வீயா என்பது வியா என்று குறுகுவது கடினம்தான். அருள்வீரோ என்பது கவிதையில் அருள்விரோ என்று இடம்நோக்கிக் குறுகக்கூடும். (வீ > வி) உண்மையில் ஈர் இறுதி இர் ஆனது. இர் ஒரு தனி விகுதி என்றும் கூறலாம், இங்கு பொருந்தவில்லை.
விய என்பது வியத்தல் என்ற சொல்லின் பகுதி. வீதல் என்பது வேறு சொல்.
நிரல் + விய -> நிரல்வியா : வியத்தகு நிரல் உடையவள் என்பது பொருளாகக் கொள்ளலாம்.
வீதல் பொருள் வரவில்லை.
vItal 1. death; 2. poverty, வீயா - வீதல் என்பதன் எதிர்மறை வடிவம்.
வினைச்சொல் பகுதி "வீ" என்பது,
mala, sudden ah innoru doubt, in tamil a suffix of யா generally gives the opposite meaning right? like theriyaa, ariyaa, puriyaa, Veeya as you have mentioned here..apadi irukkumbothu will Niralya would mean the opposite of Niral? Kindly execuse my ignorance in tamil grammar inspite of having 12 years of education in it
-
26th July 2013 12:23 PM
# ADS
Circuit advertisement
-
26th July 2013, 07:43 PM
#2
Senior Member
Seasoned Hubber
Hi rsubras
நீங்கள் குறித்த சொற்களில் இறுதியில் யா என்ற எழுத்து வந்தாலும், இவற்றில் எதிர்மறைப் பொருள் தருவது உண்மையில் -யா அன்று. அந்த எதிர்ப்பொருளைப் பின் எந்த எழுத்து தருகிறது என்றால், - ஆ என்ற எழுத்தே யாகும்.
உதாரணம்:
ஓடாக் குதிரை - இங்கே -ஆ தானே உள்ளது.
இராமாயணம் இயற்றிக் கம்பன் இறவாப் புகழ் அடைந்தான்.
இங்கே -வா வந்துவிட்டது. இந்த -வா, உண்மையில் -ஆ தான். இது -வா ஆனதற்குக் காரணம், புணர்ச்சியில் வந்த வகர உடம்படு மெய்.
காணாப் பொன்னைத் தேடிச் செம்படவன் கடலுக்குச் சென்றான்.
இங்கே -ணா வந்துவிட்டதே!
வேண்டாப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பது தானமாகுமா?
இங்கே -டா வந்துவிட்டதே!
மற்றும் நிரல் என்பது பெயர்ச்சொல். இது கேள்வியாகும்போது, நிரலா? என்றுதான் வரும். நிரல்யா என்று வராது. நிரலுக்கு எதிராகச் சொல்லவேண்டுமானால், நிரலின்மை, நிரலன்மை, நிரலற்ற (பெயரெச்சம்), ( x நிரலுற்று - affirmative) என்று சொல்லலாமேயன்றி நிரல்யா என்று வருமாறில்லை.
இகர உயிரில் முடிந்தால், யகர உடம்படு மெய் வரும். அறியா, தெரியா, புரியா என்று. அறி, தெரி, புரி - இவற்றில் இறுதியில் நின்றது இகர உயிர்.
அகரத்தில் முடிந்தால் வகர உடம்படு மெய் தோன்றுமே!
இற > இறவா, பிற > பிறவா!
கற > கறவா ( கறவாப் பசு).
பிறவா வரம் தாரும் ..... பெம்மானே : இது தண்டபாணி தேசிகர் பாட்டு! கேட்டிருப்பீர்களே......
ஐயம் வேண்டாம்.
குறிப்பு
சரண்யா, அகல்யா, தன்யா முதலான பெயர்களும் நினைவுறுத்திக்கொள்ளத் தக்க வடிவங்கள்..
இங்கு யா என்பது ஆயா என்பதன் சிதைந்த வடிவமே
யாது, யாவை, யார், யா என்பன தனிச்சொற்களாய் (விகுதிகளாய் அல்லது சொல்லீறுகளாய் அல்லாமல்) வாக்கியத்தில் கேள்வியாகும்.
பெண்ணின் பெருந்தக்க யா உள? - குறள்
அதற்காக, யா வருமிடங்களெல்லாம் கேள்விகள் ஆகமாட்டா.
நிரல்யா என்ற பெயரில் எந்த இலக்கணக் குழப்படியும் இல்லை. எதிர்மறைக் கருத்து வெளிப்பாடு, கேள்வி போலிருத்தல் ஒன்றுமில்லை.
அதில் மனம் ஒன்றாவிட்டால், நீங்கள் குறிப்பிட்ட மற்ற பெயர்களுக்குத் தாவிவிடுங்கள். மேலும் வினாக்கள் இருந்தாலும் உரையாடலாம் Do not worry.
Last edited by bis_mala; 27th July 2013 at 07:33 PM.
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks